×

அரசு உதவிபெரும் பள்ளியில் நடந்த பெரும் மோசடி : போலி மாற்றுச் சான்றிதழ்கள் தயாரித்தது அம்பலம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரசு உதவி பெரும் பள்ளியில் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. ஆரணியை அடுத்த பத்தியாபுரம் சூசை நகரில் உள்ள புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. மாற்றுச்சான்றிதழ்கள் வாங்கி கொண்டு செல்லும் மாணவர்கள் பெயரில் போலியாக மாற்றுச்சான்றிதழ்களை தயாரித்து அதனை பள்ளி நிர்வாகமே 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர் என்பது குற்றச்சாட்டாகும்.

விற்கப்பட்ட சான்றிதழ்கள் தங்களது பள்ளியிலிருந்து தயாரிக்கப்பட்டது என்று பள்ளி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசு உதவி பெரும் இந்த பள்ளியின் மோசடி குறித்து மாவட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : school , School, fraud, fake alternative certificate
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி